23 Aug 2020

வாள் வெட்டில் 15 வயது மாணவச் சிறுவன் பலி.

SHARE

 
(ஹுஸைன் ) 

கோஷ்டி மோதல் காரணமாக இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் மாணவனான 15 வயதுச் சிறுவன் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.சனிக்கிழமை 22.08.2020 இரவு  கொம்மாதுறை விநாயகர் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் இடம்பெற்ற  இச்சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் (வயது 15) எள்ற மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயம் கோஷ்டி மோதலாக மாறி பின்னர் பழி தீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம்பவத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள  ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் விளையாட்டுக்களில் மிகவும் ஆர்வத்தோடு பங்குபற்றுபவர் என்றும் சிறந்த பணிவான குணாம்சங்கள் கொண்டவர் என விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் செங்கடி மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து இந்த மாணவன் பங்குபற்றிய வொல்லி போல் அணி முதற் தடவையாக கல்குடா வலய மட்ட அரை இறுதிப் போட்டி வரை சென்றவர் என அவர் மேலும் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட மாணவன் கடெற் அணியிலும் பங்குபற்றி சிறந்த ஒழுக்கங்களைப் பேணி வந்தவர் என்று கிராமத்தவர்களும் சக மாணவர்களும் பாடசாலைச் சமூகமும் தெரிவிக்கின்றது.

இச்சம்பவம்பவத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள  ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: