11 Jul 2020

கையும் மெய்யுமாகப் பிடிபட்ட கசிப்பு.

SHARE
கையும் மெய்யுமாகப் பிடிபட்ட கசிப்பு.
மட்டக்களப்பு மவாட்டம் வெல்லாவெளில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வம்மியடியூற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் உற்பத்தி செய்யப்பட்ட கசிப்பையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெயவருவதாவது…

அப்பகுதி கிராமசேவகர் அ.சிறிநாதனுக்குக் கிடைத்த தகவலையடுத்து, கிராமசேவகர் சகிதம் வெல்லாவெளி பொலிநிலையப் பெறுப்பத்திகாரி ஆனந்தசிறி உள்ளிட்ட குழுவினர் சனிக்கிழமை(11) மேற்கொண்ட நடவடிக்கையின்போது வம்மியடியூற்றுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்த ஒருவரை பொலிசார் கையும் மெய்யுமாக பிடித்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, அவற்றுக்குப் பயன்படுத்தும் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மிக அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறையில், கசிப்பு, மற்றும், கோடா உற்பத்திகள் அதிகரித்துள்ளதோடு பொலிசாரும் கிராமசேவை உத்தியோகஸ்த்தர்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள், மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து அவற்றைக் கைப்பற்றி வருவதும், சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தகதாகும்.








SHARE

Author: verified_user

0 Comments: