14 Jul 2020

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாவனையாளர்களுக்கு விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்.

SHARE
(சறூக்)

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாவனையாளர்களுக்கு விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மட்டக்களப்பு பிராந்திய நீர் ப்பாவனையாளர்களுக்கு விடுக்கப்படும்; முக்கிய அறிவித்தல். வவுனதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இடம்பெறவுள்ள பராமரிப்பு வேலை காரணமாக புதன்கிழமை (15.07.2020) அதிகாலை 04:00 மணி தொடக்கம் இரவு 10:00 மணி வரை மட்டக்களப்பு நகர், இருதயபுரம், ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, காத்தான்குடி, ஆரையம்பதி, வவுனதீவு, மற்றும் கொக்கட்டிசோலை, போன்ற பிரதேசங்களில நீர் வழங்கல் தடைப்படும் என்பதனால் பாவணையாளர்கள் தங்களுக்கு தேவையான நீரினை செவ்வாய்கிழமை (14) இரவு 10:00 மணிக்கு முன்னர் பெற்று சேகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.

அத்துடன், செவ்வாய்கிழமை (14) இரவு 10:00 மணிக்கு பின்னரான நேரத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் பெறகூடியதாக இருப்பினும் அவ்வாறு பெறுதலை முற்றுமுழுதாக தவிர்த்து நீர் குழாய்களின் அழுத்தங்களை பேணுவதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு, பிராந்திய முகாமையாளர் செவ்வாய்கிழமை (14) தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: