5 Jul 2020

வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில் தொல்பொருள் பிரதேசமாகஅடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு

SHARE
வெல்லாவெளி வேத்துச்சேனை கிராமத்தில்  தொல்பொருள் பிரதேசமாகஅடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமை (05) ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு  போரதீவுப்பற்று  வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  வேத்துச்சேனை கிராமத்தில்  தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி தலைமையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி என சந்தேகிக்கப்படும் நபர்கள் சனிக்கிழமை (04)வேத்துசேனை கிராமத்தில் உள்ள புளியடி வைரவர் ஆலயம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களை  பார்வையிட்டு சென்றததையடுத்து பொதுமக்கள், கிராமவாசிகள் இதன்போது குழப்பநிலையினை அடைந்திருந்தனர். அதாவது குறித்த தமிழ் கிராமத்தில் பௌத்தமத ஆலயம் அமைக்கப்படலாம் என சந்தேகம் வெளியிட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு தமது பூர்வீக காணியில் தொல் பொருள் நிலையமாக அமைப்பதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என தமது பலமான எதிர்ப்பை வெளியீட்டார்கள்.

இதனால் ஞாயிற்றுக்கிமை வேத்துச்சேனை கிராம மக்கள் குறித்த பகுதியில் எதிர்ப்பு நடவடிக்களை முன்னெடுக்க முற்பட்ட வேளையில் பொலிசார், மற்றும் பொதுமக்களிடையே பயங்கரமான முறுகல் நிலைமை ஏற்பட்டது.குறித்த காணியானது தனியாருக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதி  விளையாட்டு மைதானமாகவும்,மற்றையை பகுதி வேத்துச்சேனை புளியடி வைரவபர் ஆலயத்திற்காகவும் நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றார்கள்.அதனை தொல்பொருள் பகுதியாக அடையாளப்படுத்த வேண்டாமென பொதுமக்கள் இவ் எதிர்ப்பை தெரிவித்தார்கள்.

இதன்போது குறித்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ளான எஸ்.வியாளேந்திரன்,சீ.யோகேஸ்வரன், ஞா.கிருஸ்ணப்பிள்ளை, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், இலங்கை மக்கள் முன்னேற்ற கட்சியின் தவிசாளர் அருண்தம்பிமுத்து ,இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் நா.விஸ்ணுகாந்தன்,இராமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணாக்கியன்,போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் யோ.ரஜனி,வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி,பொலிசார்,விஷேட அதிரடிப்படையினர்,இராணுவத்தினர் விஜயம் மேற்கொண்டு குறித்த சம்பவத்தை பார்வையிட்டதுடன் இவ்விடயமாக மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் எஸ்.வியாழேந்திரன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியாரின் கவனத்திற்கு எட்டிவைத்து தீர்வைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

குறித்த ஆலயத்தில் இன்று ஒன்று திரண்டிய பொதுமக்கள் ஆலயத்தை துப்பரவு செய்து பூசை வழிபாட்டையும் மேற்கொண்டார்கள்.குறித்த பிரதேசத்தில் பொலிசார், இராணுவத்தினர், தமது கடமைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இன்றையதினம் மட்டக்களப்பு விகராதிபதி அம்பிட்டிய சுமணரத்ண தேரர் வேத்துச்சேனை கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டநிலையில் அங்குள்ள பொதுமக்களால் அவ்விடத்தில் இருந்து திருப்பி அனுப்பட்டார்.இதனைத்தொடர்ந்து அவ்விடத்தில் சுமூக நிலைமை ஏற்பட்டத்துடன் பொதுமக்கள் அவ்வாலயத்தில் வழமைபோன்று பூசை வழிபாட்டுடன் பொங்கள் சாப்பிட்டு வீட்டுக்குச் சென்றார்கள்.








SHARE

Author: verified_user

0 Comments: