13 Jul 2020

மட்டக்களப்பில் தபால் மூலவாக்களிப்பு இன்று ஆரம்பம்.

SHARE
மட்டக்களப்பில் தபால் மூலவாக்களிப்பு இன்று ஆரம்பம்.
எதிர்வரும் 2020 பொதுத்தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலவாக்களிப்பு பணிகள் சுகாதாரசேவையாளர்களின் வாக்களிப்புடன் இன்று(13)  ஆரம்பமாகியுள்ளன.

இதன்படி மாவட்டத்திலுள்ள 14 பொதுசுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகத்திலும் இந்தவாக்களிப்பு இடைபெற்றது. சுமார் 300 உத்தியோகத்தர்கள் இன்று தபால்வாக்களித்ததுடன் இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள, அனைத்து தபால்வாக்களிப்புகளிலும் கொரோனா தடுப்புசுகாதார முறைகளைகவனிக்கும் பணிகளில் ஈடுபடுவர் .
இம்மாவட்டத்தில் தபால் மூலவாக்களிப்பிற்காக மட்டக்களப்பு தேர்தல்தொகுதியில் 7342 அரச உத்தியோகத்தர்களும், பட்டிருப்புத் தொகுதியில் 3047 அரச உத்தியோகத்தர்களும், கல்குடா தேர்தல் தொகுதியில் 2426 அரச உத்தியோகத்தர்களுமாக மொத்தம் 12815 பொலிஸ் மற்றும்முப்படையினர் அடங்களானஅரசஉத்தியோகத்தர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கமைய தேர்தல்கடமைகளில் ஈடுபடும் அரச அலுவலர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்காக 14, 15ஆந் திகதிகள் தத்தமது அரசகாரியாலயங்களிலும் மற்றும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ், முப்படை சிவில்பாதுகாப்புபடை உட்பட சுகாதாரதுறையினர் எதிர்வரும் 16, 17ஆந்திகதிகளில் நள்ளிரவு12.00 மணிவரைவாக்களிக்க முடியுமெனவும், இத்தினங்களில்வாக்களிக்க முடியாதவர்கள் தாம்சேவைபுரியும் நிலையம் அமைந்துள்ள மாவட்ட செயலகங்களில் அல்லது மாவட்ட தேர்தல்காரியாலயங்களில் வாக்களிக்கமுடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 



SHARE

Author: verified_user

0 Comments: