4 Jun 2020

அஸ்வின்ன கடன் திட்டத்தின்கீழ் விவசாயி ஒருவருக்கு நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வழங்கப்பட்டது.

SHARE
அஸ்வின்ன கடன் திட்டத்தின்கீழ்  விவசாயி ஒருவருக்கு நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வழங்கப்பட்டது.
விவசாயத்தையும், விவசாயிகளின் பொருளாதாரத்தையும் உயர்த்தும் வகையில் அரசினால் பல செயற் திட்டங்கள் நாடுபூராவும் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை மக்கள் வங்கி கிளையினால் அஸ்வின்ன கடன் திட்டத்தின்கீழ்  விவசாயி ஒருவருக்கு நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை   (03)  இடம்பெற்றது.

மட்டக்களப்பு கரவெட்டி - அரசடிச்சேனை கிராமத்தில் வைத்து புதுநகரைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு இந்த நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வழங்கப்பட்டது. 

அஸ்வின்ன கடன் திட்டத்தின்கீழ் இலங்கையின் முதற்தடவையாக மேற்படி விவசாயிக்கு நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது வங்கி பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய முகமையாளர் என்.சிறிஸ்காந்தா,  பிராந்திய உதவி முகாமையாளர் மா. மோகனதாஸ் மற்றும் விவசாயிகள், வங்கி ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். 



SHARE

Author: verified_user

0 Comments: