6 Jun 2020

துறைநீலாவணையில் வறுமைப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

SHARE
(க.விஜய்)

துறைநீலாவணையில் வறுமைப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.நாட்டில் நிலவிய கொரோனாவினால் துறைநீலாவணை கிராமத்தில் தொழில் இழக்கப்பட்ட வறுமையான 500 குடும்பங்களுக்கு களுவாஞ்சிகுடி சூரியா அரிசி ஆலை உரிமையாளரும், முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளருமான இளையதம்பி-தவஞானசூரியம் அவர்களின் ஏற்பாட்டில்  துறைநீலாவணைக்கு இன்று சனிக்கிழமை(6) வழங்கி வைத்தார்.


துறைநீலாவணையில் வறுமைப்பட்ட குடும்பங்கள் கோரோனாவினால் சுயதொழில் இல்லாமல் கஸ்டப்படுவதை அமைப்பாளருக்கு தெரியப்படுத்தியடுத்து 800 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகளை 500 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இவ்வாறு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு துறைநீலாவணை முன்னாள் கிராமத்தலைவர் தம்பியப்பா -யோகராசா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வங்கி உத்தியோகஸ்தர் சூரியகுமார், துறைநீலாவணை நல்லெழுச்சி இளைஞர் அமைப்பின் முக்கிஸ்தர் கந்தமுத்து சங்கீத்,பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.




SHARE

Author: verified_user

0 Comments: