30 May 2020

News for மாநகர சபையின் ஊழியர் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் 54ஆவது பொது கூட்டம்

SHARE
மட்டக்களப்பு மாநகர சபையின் ஊழியர் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் 54ஆவது பொது கூட்டமானது சனிக்கிழமை (30) சங்கத்தின் தலைவர் சி.ஜெயந்தன் தலைமையில் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
கொரொனா தொற்றின் அச்சம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அங்கத்தவர்களின் எண்ணிக்கையுடன் சமூக இடைவெளியினை பேணி ஒழுங்கமைக்கப்பட்ட மேற்படி கூட்டமானது மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.மகேஸ்வரன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வை.ஏ. ரஞ்சன் ஆகியோரின் சமூகத்தில் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற 53 ஆவது கூட்டத்தின் கூட்டறிக்கையும், எண் பார்வையறிக்கையும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதுடன் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.

இதன்படி நடப்பு வருடத்துக்கான தலைவர், உபதலைவர், செயலாளர், பொருளாளராக முறையே சி.ஜயந்தன், ஆர்.பி.ஜெயநாதன், உ.அருணகிரிநாதன், சி. ராஜ்மோகன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன், அலுவலக பிரிவு சார்ந்து 7 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டதோடு  உள்ளக கணக்காய்வாளராக பி.விஜேதரனும் தெரிவு செய்யப்பட்டார். 







SHARE

Author: verified_user

0 Comments: