21 May 2020

கோஷ்டி மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு ஏறாவூர் ஐயங்கேணியில் சம்பவம்

SHARE
(ஏ.எச்.ஏ. குஸைன்)

கோஷ்டி மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு - ஏறாவூர் ஐயங்கேணியில் சம்பவம்.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஜயங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான விஜயபாலன் நிரோஷன் (வயது 25) என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ஆரம்பித்த வாய்த்தர்க்கம் பின்னர் கோஷ்டி மோதலாக மாறியதில் இந்தக் கொலை நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மீன்பிடித் தொழில் புரிபவரான நிரோஷன் தனது நண்பரின் வீட்டிற்கு சென்று திரும்பும்போது ஒரு கோஷ்டியினர் வழி மறித்து இவரைக் கூரிய ஆயுதத்தினால் தாக்கியதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்தில் காயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவரின் சடலம் பிரேதக் கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் சந்தேக நபர்களைத் தேடி வருவதோடு மேலதிக விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: