5 Apr 2020

பறவைகளின் சரணாயலத்தைப் பேணவேண்டும்.

SHARE
பறவைகளின் சரணாயலத்தைப் பேணவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கும், மண்முனைப் பற்றுப் பிரதேசத்திற்கும், உட்பட்ட பகுதியில் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியோரமாக அமைந்துள்ள குளத்தில் மிக நீண்டகாலமாகவிருந்து உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகளின் சரணாலயமாக காணப்பட்டு வருகின்றது.

குளத்தினுள் இருக்கின்ற மரங்களிலும், பற்றைகளிலும், பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டுப் பறவகையினங்கள், வாழ்ந்து வருவதனால் மக்கள் அதனை மாலை வெளைகளிலும், ஏனைய பொழுது போக்கு நேரங்களிலும் அவற்றைக் கண்டு இரசித்து வருவது வழக்கம்.

தப்போதைய நிலையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி மக்கள் நடமாட்டற்று சோபை இழந்த நிலையில் காணப்பட்டு வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இருப்பினும் எதிர்காலத்தில் குறித்த குளத்தைப் புணரமைப்புச் சுற்றிவரவுள்ள வீதிகைளையும், புணரமைப்புச் செய்து பறவைகளின் சரணாயலத்தை மக்கள் இலகுவில் இரசித்துக் கண்டுகளிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகளை சம்மந்தப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


































SHARE

Author: verified_user

0 Comments: