21 Apr 2020

பட்டிருப்புத் தொகுதி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏப்ரல் 21 ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வு.

SHARE
(ஐங்கரன்)

பட்டிருப்புத் தொகுதி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏப்ரல் 21 ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வு.
கடந்த ஆண்டு ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பேரூந்து தரிப்பு நிலையத்தில் செவ்வாய்கிழமை (21) இரவு இடம்பெற்றது.

பட்டிருப்புத் தொகுதி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பிரதம பொலிஸ் பரிசோதகருமான, எஸ்.குணவர்த்தன, கிறிஸ்;தவ போதகர் தேவ சீலன், பொலிசார், மற்றும் இளைஞர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, கலந்து கொண்டோரால் நினைவுச் சுடர்களும் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து இறந்தவர்களை நினைவு கூர்ந்து அகவணக்கமும் செலுத்தப்பட்டன.


















SHARE

Author: verified_user

0 Comments: