12 Mar 2020

மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்.

SHARE
மட்டக்களப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் குறைந்து வருகின்றது. அந்தவகையில் கடந்த பெப்ரவரி 29 ஆந் திகதி தொடக்கம்; 2020 மார்ச்சு  06 ஆந் திகதி வரையும் 100 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020ம் ஆண்டு பெப்ரவரி 29 ஆந் திகதி தொடக்கம்; 2020 மார்ச்சு 06 ஆந் திகதி வரை 100 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மட்;டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை 10 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அது போன்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 23 பேர்;;,  களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில்  15 பேர், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 6 பேர், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 03 பேர்;, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 5 பேர், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 09 பேர், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேர், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 09 பேர், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 11 பேர், கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 02 பேர், வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் 03, ஆகிய பகுதியில்; இனங் காணப்பட்டுள்ளனர். இருப்பினும் வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை. மேலும் கடந்த இரு வாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் எந்த ஒரு மரணங்களும் பதிவாகவில்லையென வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார்

மொத்தமாக கடந்தவாரம் 100 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆரையம்பதி மற்றும் கோரளைப்பற்று மத்தி பிரதேச மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: