11 Mar 2020

கொரோனா தாக்கத்திலிருந்து மட்டக்களப்பு மக்கள் அஜாக்கிரதையாக இருந்துவிட முடியாது வருமுன் காப்போம் ஏற்பாடே சிறந்தது வைத்திய அத்தியட்சகர் பொன்வீர.

SHARE
கொரோனா தாக்கத்திலிருந்து மட்டக்களப்பு மக்கள் அஜாக்கிரதையாக இருந்துவிட முடியாது வருமுன் காப்போம் ஏற்பாடே சிறந்தது வைத்திய அத்தியட்சகர் பொன்வீர.
கொரோனா தாக்கத்திலிருந்து மட்டக்களப்பு மக்கள் அஜாக்கிரiயாக இருந்து விட முடியாது, வருமுன் காப்போம் எனும் முன்னாயத்த ஏற்பாடே சிறந்தது என ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் பி.ஏ.டி.பி.எஸ். பொன்வீர தெரிவித்தார்.


மட்டக்களப்பு பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வருவோர் தங்கவைக்கப்பட்டுள்ள நிலைமையின் பின்னர் மட்டக்களப்பு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அச்ச நிலை குறித்து ஆராயும் விஷே‪ட கூட்டம் ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் புதன்கிழமை 11.03.2020 இடம்பெற்றது.

ஏறாவூர் நகர சபைத் தலைவர் இறம்ழான் அப்துல் வாஸித் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் பிரதேச வைத்தியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நகர சபை உறுப்பினர்கள் நகர சபை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மக்களிடம் ஏற்பட்டுள்ள பீதி குறித்தும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்குரிய ஆகக் கூடிய முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் வைத்தியர் பொன்வீர தெளிவுபடுத்தினார்.

அவர் தனது கருத்தில் மேலும் கூறியதாவது. உலகம் பூராக வியாபித்துள்ள கொரோனா உயிர்க்கொல்லி நோய் குறித்து மக்கள் உயர்ந்தபட்ச முன்னாயத்த தற்காப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது குறித்து உள்ளுராட்சி மன்றங்கள் போன்ற அமைப்புக்களும், மக்கள் அமைப்புக்களும் விரைந்து விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கைகளை குறைந்தபட்சம் 22 செக்கன்களாவது சவர்க்காரமிட்டு கழுவிக் கொள்ள வேண்டும், வெறுங் கைகளைக் கொண்டு நாசியைத் துப்புரவு செய்தல், கைகுலுக்குல் போன்றவற்றை கட்டாயமாகத் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள், ஆஸ்த்துமா நோயாளிகள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், வயோதிபர்கள், நோயெதிர்ப்புச் சக்தி குறைந்தோர் ஆகிய தரப்பினர் மக்கள் நெருக்கமாகக் கூடுமிடங்களைத் தவிர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

கர்ப்பிணஒpத் தாய்மாரை வைத்தியசாலையில் வழiமான சனங்கள் கூடும் வெளிநோயாளர் பகுதிக்கு வராமல் அவர்களுக்கென புறம்பான சிகிச்சை இடம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நீரிழிவு நோயாளிகளுக்கும் சிகிச்சைக்கான விசேட இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக தேவை இல்லாதபோது சிறுவர்களை எக்காரணம் கொண்டும் வைத்தியசாலைகளுக்கு அழைத்து வர வேண்டாம் என்று பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். வNhயதிபர்களும் அவசியமின்றி வைத்தியசாலைகளுக்கு வரவேண்டாம்.

ஏனென்றால் இவர்கள் இலகுவில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்படுகின்றது.

வெளியிடப் பயணங்கள், உல்லாச பொழுது போக்குகள், கழியாட்டங்கள், இதுபோன்று மக்கள் கூடும் நிகழ்வுகளை முடிந்தளவு தவிர்ந்து கொள்ளுதல் முன்னெச்சரிக்கைத் தடுப்பாக இருக்கும்.” என்றார்.





SHARE

Author: verified_user

0 Comments: