26 Mar 2020

மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் அவசர வேண்டுகோள்.

SHARE
 (ஆனந்தன்)

மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் அவசர வேண்டுகோள்.
மட்டக்களப்பு அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் அவசரமாக மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள் ஒன்றை வியாழக்கிழமை (26) விடுத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… அன்றாடம் கூலித்தொழிலில் ஈடுபடுகின்ற குடும்பங்களுக்கு உதவுவதற்காக அரசாங்க அதிபர் பணிமணையில் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு தற்போது செயற்பட்டு வருகின்றது.

தனி நபர்கள் மக்களுக்கு உதவ வேண்டுமாயின் இச்செயலணி மூலமாக உதவலாம் அல்லது செயலணிக்கான கணக்கு இலக்கத்திற்கு பணத்தினை வைப்பு செய்தால் அப்பணத்திற்கு பெறுமதியான பொருள்களை கொள்வனவு செய்து அடையாளம் கானப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும். இதனைத்தவிர நீங்களாக வழங்குவதை தவிர்த்துக் கொள்ளுக்கள்.

பிரதேச செயலகங்களில் சகல விபரங்களுடன் இயங்கி வருகின்றது அவர்களுக்கூடாகவே சகலருக்கும் வழங்கப்பட வேண்டி உதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது   

மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கம், இலங்கை வங்கி மட்டக்களப்பு, கணக்கு இலக்கம் - 2719857 

SHARE

Author: verified_user

0 Comments: