4 Mar 2020

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதேசங்களில் தற்போது சுவர் ஓவியம் வரையும் திட்டம் நடைபெற்று வருகின்றது.

SHARE
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நகரங்களை அழகுபடுத்தும் சுவர் ஓவியங்கள் வரையும் நடவடிக்கையில் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதேசங்களில் தற்போது சுவர் ஓவியம் வரையும் திட்டம் நடைபெற்று வருகின்றது.இதில் மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் விடுதி மதில்களில் ஓவியம் வரையப்பட்டு வருகின்றது. அதேபோன்று வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவர்களிலும் ஓவியங்கள் வரையப்பட்டு வருவது போன்று மட்டக்களப்பு நகரின் புற நகர்ப்பகுதியான பிள்ளையாரடி பிரதேசத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சுற்று மதிலில் இலங்கையின் அபிவிருத்தி புராதன நிகழ்வுகளை சித்தரிக்கின்ற ஓவியங்கள் வரையப்பட்டிருந்த சுற்றுமதில் ஓவியங்களை நாளை (05) காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கப்படவுள்ளது.

பொறியியலாளர் ஏ. சசிநந்தன் தலைமையில் நடைபெறவுள்ள மட்டக்களப்பில் முதல் தடவையாக சுவர் ஓவியத்தினை திறந்து வைக்கின்ற செயற்பாட்டினை வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் திறந்து வைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாணப் பணிப்பாளர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்

பொறியியலாளர் கே. சிவநாதன், சிறப்பு அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் திருமதி கே. வன்னியசிங்கம், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.











SHARE

Author: verified_user

0 Comments: