மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவிருந்த மாகாண ஊடகவியலாளர் செயலமர்வு ஒத்துவைப்பு.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம், மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில், இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka Press Council) அனுசரணையுடன் “தேசிய அபிவிருத்தியும் ஊடகவியலாளர்களின் பங்கும்” எனும் தொனிப்பொருளில் மாகாண ஊடகவியலாளர் செயலமர்வு எதிர்வரும் 21.03.2020 சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், ஊடகவியலாளர்கள், ஊடகக் கற்கை நெறி கற்பிக்கும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள் ஆகியோருக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான அச்சுறுத்தல் மற்றும் தனிமைப்படுத்தும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதனால் இந்நிகழ்வு ஒத்திவைக்கப்படுகின்றது. மீண்டும் இந்நிகழ்வு நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
மாவட்ட தகவல் அதிகாரி
0 Comments:
Post a Comment