மட்டக்களப்பு மாவட்ட சாரதிகள் சங்கம் அங்குராப்பணம்.
மட்டக்களப்பு மாவட்ட சாரதிகள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை (9) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் தனியார் வாகனங்களில் கடமையாற்றும் சாரதிகளின் நன்மைகருதி மேற்படி சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (09) மாலை மட்டக்களப்பு டச் பார் சன சமூக மண்டபத்தில் இடம் பெற்றது. இதன் அங்குரார்ப்பண கூட்டம் சாரதி ஜட்லி யூட் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தலைவராக சு.சுரேஷ்குமார் மற்றும் செயலாளராக அ.ஜெயராசா பொருளாளராக ஜட்லி ஜூட் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சாரதிமார் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சாரதிகளை ஒருங்கிணைத்தல். சாரதிகளின் உரிமைக்காக குரல் கொடுத்தல். விபத்தின் போது காயமடையும், மரணமடையும் சாரதிகளின் குடும்பங்களுக்கு உதவுதல் போன்ற நலன்களைக் கருதி குறித்த சாரதிகள் சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இக்கூட்டத்தில் 75 இற்கும் மேற்பட்ட சாரதிகள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment