21 Feb 2020

குடியிருப்பில் வறிய நிலையில் நிலையில் உள்ள குடும்பத்திற்கு வீடு திருத்த நிதியுதவி.

SHARE
குடியிருப்பில் வறிய நிலையில் நிலையில் உள்ள குடும்பத்திற்கு வீடு திருத்த நிதியுதவி.
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பம் ஒன்றின் வீடு ஒன்றினை திருத்துவதற்கான நிதியுதவிகள் வெள்ளிக்கிழமை (21) வழங்கிவைக்கப்பட்டன.
மட்டக்களப்பிலிருந்து சமூகசேவைகளை மேற்கொண்டுவரும், இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கடந்த யுத்த சூழ்நிலையினால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்ட இக்குடும்பம் மிகவும் வறிய நிலையில் இருந்துவருகின்றது. குறித்த குடும்பத்தின் வீட்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் காணப்பட்டதுடன் பாதுகாப்பு இல்லாத நிலையும் காணப்பட்டது. இது தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியனிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது குறித்த வீட்டினை திருத்தி கதவிடுவதற்கும், மின்சாரத்தினையும் பெற்றுக்கொள்வதற்கான உதவிகள் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியனால் வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் கலந்து கொண்டார். 




SHARE

Author: verified_user

0 Comments: