23 Feb 2020

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின், அனுசரணையில் திருப்பழுகாமத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழா.

SHARE
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின், அனுசரணையில் திருப்பழுகாமத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழா.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின், அனுசரணையுடன், மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகமும், திருப்பழுகாமம் சிவன் அறநெறிப்பாடசாலையும் இணைந்து, நடாத்திய மஹா சிவராத்திரி விழா திருப்பழுகாமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வர தேவஸ்தானம் (சிவன் ஆலயத்தில்) வெள்ளிக்கிழமை (20) இரவு நான்கு சாமப் பூசை நடைபெற்றன.

முதலாம் சாமப் பூசை வழிபாடு, பி.ப 06.01 முதல் பி.ப 09.00 மணிவரையும், இரண்டாம் சாமம் பூசை வழிபாடு பி.ப 09.01 முதல் நள்ளிரவு 12.00 மணிவரையும், மூன்றாம் சாமப் பூசை வழிபாடுகள் சனிக்கிழமை (22.02.2020) அதிகாலை 12.01 முதல் அதிகாலை 03.00 மணிவரையும், நான்காம் சாமப் பூசை அதிகாலை 03.01 முதல் காலை 06.00 மணிவரையும் நடைபெறவுள்ளன. அத்தோடு, விஷேட அபிஷேக ஆராதனைகளும், லிங்கோற்பவ மூர்த்திக்கு 1008 சிவ நாம அர்ச்சனைகளும், இடம்பெற்றன.

மஹா சிவராத்திரி விழாவைச் சிறப்பிக்கும் முகமாக திருப்பழுகாமம் அறநெறிப்பாடசாலைகளினது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதாக மேற்படி ஆலய நிருவாகம் தெரிவித்தது.

























SHARE

Author: verified_user

0 Comments: