13 Feb 2020

சுரவணையடியூற்றில் பகல் வேளையில் காட்டு யானைகளின் அட்டகாசம்.

SHARE
(சுரவணையூர் தவா)

சுரவணையடியூற்றில் பகல் வேளையில் காட்டு யானைகளின் அட்டகாசம். 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தில் வியாழக்கிழமை (13) காலை காட்டு யானை கிராமத்திற்குள் நுழைந்து மூவரைத் தாக்கியுள்ளது. 


இதில்  72 வயதுடைய கா.தாமோதரம்பிள்ளை,  52 வயது மதிக்கத்தக்க சி.நாகசோதி ஆகியோர் குறித்த யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மயக்கமுற்ற நிலையில்   களுவாஞ்சிகுடி ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றயயவர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார். 

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்ட  72 வயதுடைய கா.தாமோதரம்பிள்ளை,  மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த யானையின் தாக்குதலில் உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  சம்பவ இடத்திற்கு வருகைதந்த கிராம சேவை உத்தியோகத்தர் கோபாலசிங்கம் பிரதேச  வனஜீவராசிகள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். எனினும் குறிப்பிட்ட இடத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்திற்கு சமூகமளிக்கததனால்  பிரதேசவாசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளார்கள்.

பின்னர் காட்டு யானையை மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு ஒருவாறு கிராமத்தை விட்டு விரட்டியுள்ளனர். அதன்பின்னர்தான் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் வந்து பாரத்துவிட்டுச் சென்றுள்ளதாக அக்கராமத்து மக்கள் தெரிவித்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: