11 Feb 2020

பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமாரை பொதுத் தேர்தலில் களமிறங்க வேண்டுமென ஆதரித்து மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் ஒன்றுகூடல்.

SHARE
பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமாரை பொதுத் தேர்தலில் களமிறங்க வேண்டுமென ஆதரித்து மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் ஒன்றுகூடல். 
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமாரை பொதுத் தேர்தலில் களமிறங்க வேண்டுமென அவரை ஆதரித்து மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் யுவதிகளின் ஒன்றுகூடல் மாநாடு ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (9) மாலை மட்டக்களப்பு கல்லடி பாலத்தருகில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ஜேசுதாசன் சுஜிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார்,  மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணியின் அமைப்பாளர் ஆர்.காஞ்சனா,  கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் கே.கணேசலிங்கம், மண்முனை வடக்கு பிரதேச இளைஞர், யுவதிகள,  கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமாரை வெற்றிபெறச் செய்து எமது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அவரை நாடாளுமன்றம் அனுப்பி அமைச்சர் ஒருவரை பெறவேன்டியது காலத்தின் தேவை எனவும், இதனை நாம் தீர்மானித்து விட்டோம் எனவும் இதில் கலந்துகொண்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: