கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜெயவர்தன பதவியேற்பு,
கிழக்கு மாகாணத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜெயவர்தன கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண உதவி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் புதன்கிழமை (01.01.2020) இந்த கடமையேற்பு நிகழ்வு நடந்தது.
கிழக்கு மாகாணத்தின் உதவி பொலிஸ் மா அதிபராக இதுவரை கடமையிலிருந்த கபில ஜெயசேகரா கடந்த வருடம் நொவெம்பெர் மாதம் 20ம் திகதி ஒய்வு பெற்றுச் சென்றிருந்தார்.
அதன் பின்னர் அந்த வெற்றிடத்திற்கு உதவி பொலிஸ் மா அதிபராக லலித் பத்திநாயக்க கடமைகளைப் பொறுப்பேற்று அவரும் கடந்த டிசெம்பெர் 30ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.
அதனையடுத்து அந்த வெற்றிடத்திற்கு உதவி பொலிஸ் மா அதிபராக நிலந்த ஜெயவர்தன நியமிக்கப்பட்டு அவர் இவ்வருடம் முதலாம் திகதி தனது கடமைகளைப் பெறுப்பேற்றுள்ளார்.
0 Comments:
Post a Comment