(சுரவணையூர் தவா)
மழை வெள்ளத்தினால் பாதிப்புற்ற வீதிகளைப் புணரமைத்துத்த தருமாறு கோரிக்கை.
அண்மையில் பெய்த பலத்த வெள்ளத்தினால் மட்டக்களப்பு மவாட்டத்திலுள்ள பல கிராமங்களின் கிறவல், மற்றும் மணல் வீதிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்ட சுரவணையடியூற்று கிராமத்தின் உள்வீதிகள் வெள்ளநீர் ஓடி போக்குவரத்துச் செய்ய முடியாத அளவிற்கு சிதைவடைந்து காணப்படுவதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே வருடாந்தம் இவ்வாறு மழை வெள்ளத்தினால் பாதிப்புற்றுவரும் எமது கிராமத்திலுள்ள கிறவல், மற்றும் மணல் வீதிகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் துரிதகதியில் செப்பனிட்டுத் தருமாறு சுரவணையடியூற்று கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment