17 Dec 2019

ஐரோப்பிய ஒன்றியத்தின் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுப்படுத்தும் திட்டத்தின்கீழ் செயற்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் பற்றி ஆராயும் கூட்டம்.

SHARE
ஐரோப்பிய ஒன்றியத்தின்  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுப்படுத்தும் திட்டத்தின்கீழ் செயற்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் பற்றி ஆராயும் கூட்டம்.   
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின்  உதவியுடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுப்படுத்தும் திட்டத்தின்கீழ் செயற்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் பற்றி ஆராயும் கூட்டம்   செவ்வாய்கிழமை (17) பிற்பகல் வவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை கூட்டுறவின் ஊடாக மேம்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வீ எபக்ற்ட் ; (We Effect நிறுவனத்தினுடாக உன்னிச்சை, பன்சேனை ஆகிய கிராமங்களில் இச் செயற் திட்டம் காவியா பெண்கள்  அமைப்பினால்  நான்கு ஆண்டு திட்டமாக செயற்படுத்தப்பட்டுவருகின்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக  வெளிக்கள உத்தியோகத்தர்கள் ,  கிராம செயற் திட்ட பயனாளிகள் மற்றும் காவியா பெண்கள் அமைப்பின் திட்ட இணைப்பாளர், கணக்காளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது மேற்படி கிராமங்களில் இத்திட்டம் எவ்வாறு முன்னோக்கி செல்கின்றது என்பது பற்றியும் இத் திட்டத்தின் குறை நிறைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.



SHARE

Author: verified_user

0 Comments: