25 Nov 2019

குளத்து நீரில் மூழ்கிய இளைஞர்களில் மூவர் பலி

SHARE
குளத்து நீரில் மூழ்கிய இளைஞர்களில் மூவர் பலி.
மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுக்கேணிப் பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குளத்தில் 4 இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் காப்பாற்றப்படட நிலையில் மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் திங்கடகிழமை (25.11.2019) இடம்பெற்றுள்ளது,

மீன் பிடிப்பதற்காக சென்ற இளைஞர்களில் 4 பேர் நீரில் மூழ்கியதாகவும் ஒருவர் உடனடியாக அப் பகுதியினரால் காப்பாற்றப்படட நிலையில் மூன்று பேர் காணாமல் போயிருந்தனர்.

தற்போது பிரதேச மக்களால் காணாமல் போன மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கினை சேர்ந்த எஸ். தர்ஷ‪ன் (வயது 20), கே. திவாகரன் (வயது 19), எஸ். யதுர்ஷ‪ன் (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.











SHARE

Author: verified_user

0 Comments: