குளத்து நீரில் மூழ்கிய இளைஞர்களில் மூவர் பலி.
மட்டக்களப்பு ஆரையம்பதி திருநீற்றுக்கேணிப் பகுதியில் புதிதாக தோண்டப்பட்ட குளத்தில் 4 இளைஞர்கள் நீரில் மூழ்கியதில் ஒருவர் காப்பாற்றப்படட நிலையில் மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் திங்கடகிழமை (25.11.2019) இடம்பெற்றுள்ளது,
மீன் பிடிப்பதற்காக சென்ற இளைஞர்களில் 4 பேர் நீரில் மூழ்கியதாகவும் ஒருவர் உடனடியாக அப் பகுதியினரால் காப்பாற்றப்படட நிலையில் மூன்று பேர் காணாமல் போயிருந்தனர்.
தற்போது பிரதேச மக்களால் காணாமல் போன மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஆரையம்பதி செல்வாநகர் கிழக்கினை சேர்ந்த எஸ். தர்ஷன் (வயது 20), கே. திவாகரன் (வயது 19), எஸ். யதுர்ஷன் (வயது 19) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment