31 Mar 2026

செட்டிபாளையம் சித்தி விநாயகப் பெருமானுக்கு புதிதாக அமைக்கப்பட்ட சித்திரம் தேரோட்டம்.

SHARE

செட்டிபாளையம் சித்தி விநாயகப் பெருமானுக்கு புதிதாக அமைக்கப்பட்ட சித்திரம் தேரோட்டம்.

மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் ஆதி மூலநாயகனாக கோயில் கொண்டு அருளாட்சி புரியும் சித்தி விநாயகப் பெருமானின் சித்திரத் தேரோட்டம் இன்று செவ்வாய்கிழமை(31.03.2026) மிகவும் விமர்சையாக நடைபெற்றது. 

சுவாமி உள்வீதி வலம் வந்து பின்னர் சித்திரத் தேரோறி மக்ளுக்கு அருளாசி புரிந்தார். 

29 அடி உயரத்தில் அழகுற புதிதாக இவ்வாலயத்தில் தேர் அமைத்து அதில் பெருமானை அமரச் செய்து மேளதாள வாத்திய ஒலியோடு பக்தர்களின் அரோகரா கோசம் முழங்கிய தேரோட்டம் இடம்பெற்றது. 

இதன்போது பலநூறு பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து ஆலயத்தைச் சூழ தேர் வலம் வந்தது. 

இந்த தேர்த் திருவிழாவில் பல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.




























SHARE

Author: verified_user

0 Comments: