30 Oct 2019

வனரோபா காட்டுமரங்களை வளப்படுத்தல் செயற்திட்டம்.

SHARE
வனரோபா காட்டுமரங்களை வளப்படுத்தல் செயற்திட்டம்.
ஜனாதிபதியின் விசேட செயல்திட்டத்தின்கீPழ் வனரோபா காட்டுமரங்களை வளப்படுத்தல் செயற்திட்டமானது ஒக்டோபர் முதலாம்  திகதி தொடக்கம் 31 ஆம் திகதிவரை தேசிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது தற்போது இலங்கையில் 17 வீகிதம் வனப்பகுதிகளே காணப்பட்டு வருகின்றது. இதனை 32 வீகிதம் காட்டுவளத்தினை அதிகரிப்பதற்கான இத்தேசியதிட்டத்தில் அரச, அரசசார்பற்ற அணைத்து திணைக்களங்களும் இதில் இணைந்து தற்போது செயற்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களினூடாகவும் வனப்பரிபாலன திணைக்களங்களும் மாவட்ட செயலகங்களும் இணைந்து வனரோபா செயற்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தில் நிகழ்வாக 8 ஆம் திகதி ஒக்டோபர் பெரிய புல்லுமலை மெதடிஸ் தமிழ்கலவன் பாடசாலையி;ல் நடைபெற்ற வனரோபா நிகழ்ச்சி திட்டத்தில் மத தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரங்களை பெற்று கொண்டனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (30) நடைபெற்ற வனரோபா நிகழ்ச்சி திட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் அவர்கள் கலந்து கொண்டு செயலக உத்தியோகத்தர்களுக்கும் ஏனையோருக்கும் மரங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போது எமது மாவட்டமானது இயற்கை அனர்த்தங்களுக்கு அதிகளவு முகம் கொடுக்கும் மாவட்டமாக காணப்படுகின்றது இதற்கு அடிப்படை காரணம் காடழிப்பு எனலாம் இதன் மூலமாக வெள்ளம் வரட்ச்சி நிலம் உவர்ப்பு அடைதல் ஆகிய இயற்கை அனர்த்தங்களுக்கு தீர்வாக அமைவது இயற்கை வளத்தினை பாதுகாத்து மரங்களை அதிகளவு நடவேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மட்டக்களப்புமாவட்ட விவசாய பணிப்பாளர் வை.வி.இக்பால் தனது உரையிலே இயற்கையை அதிகளவு நேசிக்கின்ற மக்களாக மாறுகின்ற போதுதான் இயற்கை அனர்த்தங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வாழமுடியும் எனவும் தொடர்ச்சியாக நமது மாவட்டத்தின் வள அடர்த்தியை பாதுகாப்பதற்கான கடந்த ஆண்டில் இருந்து இவ்ஆண்டு வரை பல்லாயிர கணக்கான காட்டு மரங்களை தொடர்ச்சியாக வன பரிபாலன சபையில் இருந்து பெற்று மாவட்டத்தின் எல்லா பகுதியில் இருந்து விநியோகித்து வருவதாக குறிப்பிட்டார்.








SHARE

Author: verified_user

0 Comments: