26 Sept 2019

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் தேசிய மீலாதுன்நபி விழா போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட நிகழ்வுக்கு தெரிவு.

SHARE

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் தேசிய மீலாதுன்நபி விழா போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட நிகழ்வுக்கு தெரிவு.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில்  மாணவன் 9ஆம் ஆண்டில் கல்வி கற்கும் காத்தான்குடியைச் சேர்ந்த மாணவன் எம்.ஆர்.எம். ஹிஷாம் தேசிய மீலாதுன்நபி விழாப்போட்டியில் பங்குபற்றி முதலாம் இடத்தை தக்கவைத்து தேசிய போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போட்டிக்கான பொறுப்பாசிரியர் எம்.எம்.எஸ். நஜீஹா தெரிவித்தார்.

தேசிய மீலாதுன்நபி விழாவிற்கான மாகாண மட்டப் போட்டி கல்முனை மஹ்மூத் பாலிகா மகாவித்தியாலயத்தில் நடைபெற்றபோதே ஹிஷாம் தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார்.
இவர் “தேசத்தை நேசிப்போம்" எனும் தொனிப்பொருளில் ஆங்கில மொழியில் உரையாற்றி 1ம் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவன் ஹிஷாமையும் அந்தப் போட்டிக்கு அவரைத் தயார்படுத்திய ஆசிரியர்களையும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் இராஜதுரை பாஸ்கர் பாராட்டி கௌரவித்ததோடு நினைவுப்பரிசையும் வழங்கி வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ‪‬‬

SHARE

Author: verified_user

0 Comments: