5 Aug 2019

பாடசாலை வகுப்பறையில் தீ

SHARE
பாடசாலை வகுப்பறையில் தீமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறபவூர் கோட்டப்பரிவிலுள்ள ஏறாவூர் அறபா வித்தியாலய இரு வகுப்பறைகளில் தீ பரவியதையடுத்து அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சனிக்கிழமை 03.08.2019 பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் இந்தப் பாடசாலையின் இரண்டு வகுப்பறைகளிலுள்ள அலுமாரிகள், கதிரைகள், மாணவர்களுக்கான வங்கி ஆவணங்கள், பரீட்சை வினாத்தாள்கள் உட்பட இன்னும் பல ஆவணங்களும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பரவியதையடுத்து உடனடியாக விரைந்து செயற்பட்ட பாடசாலை நிருவாகத்தினர் தீ பாடசாலையின் ஏனைய வகுப்பறைகளுக்கும் கட்டிடங்களுக்கும் நிருவாகப் பகுதிக்கும் பரவாமல் தீயைக் கட்டப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ பரவிய வகுப்பறைக்கு  அருகில் தீ கொளுத்தப்பட்ட தீக்குச்சிகளும் காணப்பட்டதால், இது நாசகார வேலையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்திலும் பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்துள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: