3 Jul 2019

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2019 சிறுபோக அறுவடைநெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்வதற்கான முன் ஆயத்த நடவடிக்கை.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2019 சிறுபோக அறுவடைநெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்வதற்கான முன் ஆயத்த நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2019 சிறுபோகத்து நெற்செய்கையில் அறுவடை செய்யப்படவுள்ள நெல்லை அரசாங்கத்தால் கொள்வனவு செய்வதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் விசேட கூட்டம் மாவட்டசெயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்.மாணிக்கம் உதய குமார் தலைமையில் புதன்கிழமை (03) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இவ்வருட பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ள 23 இலட்சத்தி 11300 ஆயிரம் தொன் நெல்லை விற்பனைசெய்ய அரசாங்கம் அனுமதி வழங்காததால் ஏற்பட்டுள்ள களஞ்சியதட்டுப்பாட்டினை போக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டு இதற்கென பிரதேசசெயலக பிரிவுகளில் பயன்படுத்தப்படாத கட்டிடங்களை முதல் கட்டமாக பயன்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

இத்துடன் 2018-2019 பெரும்போக நெற்செய்கைக்கு இம்மாவட்டத்துக்கு தேவையான உரமானியத்தை முன்கூட்டியே ஆயத்தம் செய்வதென்றும், வரட்சியால் பாதிக்கப்பட்ட 8069 ஏக்கர் நெல்வயலுக்குரிய 3178 விவசாயிகளுக்கு நஷ்டஈட்டுப்பணம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை துரிதப்படுத்துவதற்கும் எதிர்காலத்தில் மழைநீரை வீண்விரயம் செய்யாது தேக்கிவைப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.    

இந்த விசேடகூட்டத்தில் மாவட்டமேலதிக அரசாங்க அதிபர்.திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் நெல் சதைப்படுத்தும் சபையின் பிராந்திய  முகாமையாளர் எம்.எல்,டீ.எஸ் கருணாதிலக, பிரதம கணக்காளர். கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, மாவட்ட விவசாய பணிப்பாளர்.வை.வீ.இக்பால், கமநலசேவைகள் பிரதி ஆணையாளர் கே.ஜகன்னாத், விவசாய விரிவாக்கல் பிரதிப் பணிப்பாளர், எஸ்.பேரின்பராசா கமநலகாப்புறுதி பணிப்பாளர் கே.பாஸ்கரன், தேசிய உரச்செயலக உதவிப் பணிப்பாளர் எஸ்.சிராஜுதீன், மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். 



SHARE

Author: verified_user

0 Comments: