4 Jul 2019

போக்குவரத்து பொலிசாரின் கைத்துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் புதூர் பகுதில் பதற்றம் 2 கைது சுற்றிவளைத்து தேடுதல்.

SHARE
போக்குவரத்து பொலிசாரின் கைத்துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டதையடுத்து மட்டக்களப்பில் புதூர் பகுதில் பதற்றம் 2 கைது சுற்றிவளைத்து தேடுதல்.
மட்டக்களப்பு புதுநகர் திமிலைதீவு பிரதேசத்தில் போக்குவரத்து பொலிசார் சோதனையில் இன்று வியாழக்கிழமை (27) பகல் ஈடுபட்டிருந்தபோது அங்கு மோட்டர் சைக்கிளை செலுத்திச் சென்ற இருவருக்கும் பொலிசாருக்கும் ஏற்பட் முறுகல் நிலையில் பொலிஸ் ஒருவரின் கைதுப்பாக்கியை ஒருவர் பறித்துச் சென்றதையடுத்து அங்கு பதற்;றம் ஏற்பட்டுள்ளது. 

மட்டு தலைமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புதுநகர் திமிலைதீவு ஆலயத்துக்கு அருகில் சம்பவமினமான வியாழக்கிழமை பகல் மணியளவில் வீதி போக்குவரத்து பொலிசார் இருவர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இருவர்; தலைகவசம் இன்றி வவுணதீவு பிரதேசத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது பொலிசார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது மோட்டர் சைக்கிளை செலுத்திவந்தவர்கள் மோட்டர் சைக்கிளை திருப்ப முயன்ற போது வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக் குள்ளானதில் இருவரம் காயமடைந்தனர் 

இதனையடுத்து அங்கு ஒன்று திரண்ட பொதுமக்கள் பொலிசாருக்கும் முறுகல் நிலையையடுத்து பொலிசார் மீது தாக்க முற்பட்டவேளை பொலிஸ் உத்தியோகத்தரின் இடுப்பில் இருந்த கைதுப்பாக்கி ஒன்;றை இனம் தெரியாத ஒருவர் அபகரித்து தப்பிச் சென்றுள்ளார் இதனையடுத்த அங்கு பதற்றம் ஏற்பட்டது 

இதனையடுத்து விபத்தில் காயமடைந்த இருவரை மட்டு போhதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சிசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் வவுணதீவு களப்பு பகுதியில் இருவரை சந்தேகத்தில் கைது செய்துள்ளனர் 

இதேவேளை புதூர் மற்றும் வவுணதீவு பகுதிகளில் மேவதிகமாக இராணுவத்தினர் பொலிசார் வரவழைக்கப்பட்டு அந்த பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் மற்று விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றது .



SHARE

Author: verified_user

0 Comments: