20 May 2019

நாட்டில் ஏற்பட்ட சில பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக பாதுகாப்பு நிலமைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றது – சம்மந்தன் எம்.பி

SHARE
நாட்டில் அரசியல் ரீதியாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்ட பின்னர், நாட்டில் ஏற்பட்ட சில பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக பாதுகாப்பு நிலமைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றது. நடைபெற்ற பயங்கரவாதச் செயல்கள், ஒரு சர்வதேச பயங்கரவாதச் செயலாக கருதப்பட்ட போதிலும்கூட எமது நாட்டுக்குள்ளேயே ஒரு இன ரீதியாக பார்க்கும் ஒரு நிலமை தற்போது நிலவு கின்றது. அது நமது மக்கள் மத்தியில் பரு பரரிய வேற்றுமைகளையும், காட்டிநிற்கும் தற்பெரும் பலவீனத்தையும், ஏற்படுத்துகின்றது. இந்த நிலமையிலிருந்து நாடு மீளவேண்டும், மீளப்பெறச் செய்யவேண்டும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தற்போதைய நிலமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் அவர்களுக்கும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கத்தினருக்கும், இடையில் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை திருகோணமலையில் அமைந்துள்ள அவரது காரயாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

தமிழ் மக்களைப் பெறுத்தவரையில் தமிழ் மக்கள் நீண்ட காலமாக பல்வேறு வன்முறைகளுக்கு, உள்ளாகி வந்திருக்கின்றார்கள். தமிழர்களுடைய உரிமைப்போராட்டம் சம்மந்தமாக, ஒரு அரசியல் தீர்வு பெறுவதற்கு பல முயற்சிகள் எடுக்கபப்பட்டு, பல முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதிலும்கூட அது இன்னும் ஒரு முடிவிற்கு வரவில்லை. அதுவிடையம் சம்மந்தமாக விரைவில் ஒரு முடிவு வரவேண்டும். அதற்கான எமது முயற்சிகள் தொடர்கின்றன.

தமிழ் மக்கள் பலமாய் இருப்பதற்கு அவர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டியது அத்தியாவசியம். பல்வேறு காரணிகள் நிமித்தம் மக்கள் மத்தியில் எல்லாக் கருமங்களிலும் ஒருமித்த கருத்து இருப்பது, ஒரு கடினமான விடையம். ஆனால் தமிழ் மக்கள் ஒன்றைத் தெழிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றுமைதான் அவர்களுடைய பலம். அவர்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் பலவீனமடைவார்கள். 

சமீபத்தில்கூட நாட்டில் பலவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டபொழுது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள், விசேசமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் பிரதிநிதிகள், ஒற்றுமையாக ஒருமித்து செயற்பட்ட காரணத்தின் நிமித்தம், நாங்கள் எமது பலத்தை நிரூபிக்கத் தக்கதாக இருந்தோம். 

இந்த வருடத்தில் தேர்தல்கள் நடைபெறும். மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பன நடைபெற வேண்டும். வருகின்ற வருடத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம், அல்லது அதற்கு முன்பாகவும் நடைபெறலாம், இந்தவிதமான கருமங்கள் நடைபெறுகின்றபோது தமிழ் மக்கள் ஒருமித்து ஒற்றுமையாக தங்களுடைய செயற்பாட்டின் மூலமாக தற்களுடைய பலத்தை பிரதிபலிக்கக் கூடிய நிலமையை ஏற்படுத்த வேண்டும். அது அத்தியாவசியமாகும். 

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாங்கள் எடுக்க வேண்டிய அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கின்றோம். அரசியல் கைதிகளை விடவில்லை என நாங்கள் துப்பரவாகச் சொல்ல முடியாது ஐம்பது வீதமானவர்கள் விடுபட்டிருக்கின்றார்கள். மற்றவர்கள் விடுபடுவதைப் பொறுத்தவரையில், இருக்கின்ற அரசியல் கைத்திகளை விடுவித்தால்,  பெரும்பான்மை மக்களின் மத்தியில் சில அரசியல்வாதிகள் அதனை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, ஆட்சியிலுள்ளவர்கள் பாதகமாகப் பயன்படுத்துவார்கள் என்பதன் நிமிர்த்தம், அதில் தாமதங்கள் இருக்ககின்றன. ஆனால் எமது முயற்சி அந்த விடையம் சம்மந்தமாக தொடர்கின்றது.

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரரேரணை தொடர்பில் எமது கட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எமது நாடாளுமன்ற குழு கூடி, உரிய நேரத்தில எடுக்க வேண்டிய முடிவை நாங்கள் அறிவிப்போம். என அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: