14 May 2019

கிழக்குப் பல்கலைக் கழகததின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் புதன்கிழமை ஆரம்பம்.

SHARE
கிழக்குப் பல்கலைக் கழகததின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் புதன்கிழமை ஆரம்பம்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் புதன்கிழமை (15.05.2019) ஆரம்பிக்கப்படவுள்ளதாக அப்பல்கலைக் கழகத்தின் பதில் பதிவாளர் ஏ.பகீரதன் தெரிவித்தார்.

சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் மருத்துவ துறையில் 2012-13, 2013-14, 2014-15 மற்றும் 2015-16 பிரிவுகளும், தாதியர் துறையில் 2012-13, 2013-14, 2014-15, 2015- 16 மற்றும் 2016-17 பிரிவுகளும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படும்.

சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் மருத்துவ துறையில் 2016-17 மற்றும் 2017-18 பிரிவு தாதியர் துறையில் 2017-1816-17 பிரிவு ஆகியன திங்கட்கிழமை (20) ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் ஏப்ரில் 21ஆம் திகதி மட்டக்களப்பு உட்;பட நாட்டில் பல பாகங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றதையடுத்து மீள ஆரம்பிக்கப்படும் திகதி பிற்போடப்பட்டிருந்தது.

எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பல்கலைக் கழக வளாகம் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இப்பீடம் மீள ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

SHARE

Author: verified_user

0 Comments: