20 May 2019

வாகரையில் பாரிய விபத்து 3 எருமைகள் இஸ்த்தலத்தில் பலி.

SHARE
மட்டக்ககளப்பு மாவட்டம் வாகரை திருகோணமலை பிரதான வீதியின் கதிரவெளியில்; ஞாயிற்றுக்கிழமை(19) நள்ளிரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் 3 எருமை மாடுகள் இஸ்த்தலத்திலேயே பலியாகியுள்ளன. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
வாகரைப் பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இப்பர் ரக வாகனத்தின் மீது திடீரென 3 எருமை மாடுகள் குறுக்கீடு செய்ததினால் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது. இதனால் குறித்த 3 எருமை மாடுகளின் மீதும் வேகமாக வந்த டிப்பர் ரக வாகனம் மோதியுள்ளது. இதில் இஸ்த்தலத்திலேயே 3 எருமைகளும் உயிரிழந்துள்ளன.  

இந்நிலையில் டிப்பர் ரக வாகனத்தில் பயிணித்த எவருக்கும் எதுவித பாதிப்புக்களும் அற்ற நிலையில் தெய்வீகமாக உயிர் தப்பியுள்ளதாகவும், எனினும், தமது வாகனம் சேதமடைந்துள்ளதாகவும் வாகனத்தின் சாரதி தெரிவித்தார். 


SHARE

Author: verified_user

0 Comments: