மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் களுவாஞ்சிகுடியில் புதன்கிழமை (24) மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தானர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
இரு இளைஞர்கள் பிரதான வீதிவழியாக மட்டக்களப்பு பகுதி நோக்கி இஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர், இந்நிலையில் களுவாஞ்சிகுடி பழைய மக்கள் வங்கி வீதிவழியாக வந்து பிரதான வீதிக்கு மற்றுமொரு மோட்டார சைக்கிளில் வந்த ஒருவர் மீது மோதியதாலே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இவ்விபத்துச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது படுகாயமடைந்த மூவரும் உடனடியாக களூவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment