18 Apr 2019

கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கான ஒரு சரியான தலைமைத்துவம் இன்றி தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் போல் இருக்கின்றார்கள்.

SHARE
தற்போது கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கான ஒரு சரியான தலைமைத்துவம் இன்றி தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் போல் இருக்கின்றார்கள். கிராமத்துக்கான சிறப்பான தலைமைத்துவத்தை கிராம அபிவிருத்தி தலைவர்கள், கோயில் தலைவர்கள், விளையாட்டுக் கழகத்தலைவர்கள் வழங்கி சிறப்பாக தங்களால் முடியுமானவரை உதவுகின்ற போதும் அதற்கு கைகொடுக்க வேண்டிய அரசியல் தலைமை மக்களினால் தேர்ந்தெடுக்க பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுவதில்லை.
என கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவரும், அமைச்சர் மனோகணேசனின் கிழக்கு மாகாண  இணைப்பாளருமான கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மயிலம்பாவெளி சிவபுரம் கிராம மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட  கலைகலாச்சார நிகழ்விழா புதன்கிழமை மாலை (17) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

இனி இனிவரும் காலங்களில் கட்சிக்கு வாக்களிக்காமல் சிறந்த, திறமையான, மக்களுக்கு உதவும் நபர்களை தேர்ந்தெடுக்க வேடும். தமிழர்களுக்கு நடக்கும் பல அநீதிகளை கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
கிராம மக்கள் தங்களின் பணத்தை கொண்டு கோயில், சிறிய அபிவிருத்தி, இலவச கல்வி வகுப்புகள் ஆபதன்றவற்றை, தங்கள் மக்களுக்காக சிறப்பான தமைமைத்துவத்தின் கீழ் நாடத்துவதை பாராட்டுகின்றேன்.

அண்மைக்காலமாக அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் 850 மில்லியன் செலவில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தை மேற்க்கொண்டு இருந்தார். இதில் எனது வேண்டுகோளுக்கு இணங்க பல  அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டார். 100 மில்லியனுக்கு மேல் அபிவிருத்திக்காக மட்டக்களப்புக்கு ஒதுக்கியிருந்தார்.

இனி இளைஞர்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது மாவட்டத்தையும் மாகாணத்தையும் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து பாடுபட படவேணும் எனத்தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: