18 Apr 2019

வீதியின் மருங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி வாகனத்தின் மீது கொள்கலன் மோதியதில் சாரதி ஆபத்தான நிலையில் படுகாயம்

SHARE
வீதியின் மருங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி வாகனத்தின் மீது கொள்கலன் மோதியதில் சாரதி ஆபத்தான நிலையில் படுகாயம்.
வீதியின் மருங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படி ரக வாகனத்தின் மீது கொள்கலன் வாகனம் மோதியதில் படி வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் பொலொன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கந்தைப் பொலிஸ் பிரிவின் கீழ் வரும் மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையின் மஹாவெவ எனுமிடத்தில் இச்சம்பவம் வியாழக்கிழமை 18.04.2019 அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஏறாவூர் சத்தாம்ஹ{ஸைன் கிராமத்தைச் சேர்ந்த சேகு முகம்மது இர்பான் (வயது 38) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

சம்பவ தினமிரவு மஹாவெவ வளைவுப் பகுதியில் சித்திரைப் புத்தாண்டு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்துள்ள வேளையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

படுகாயமடைந்த படி வாகனத்தின் சாரதி அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு முன்னதாக வெலிக்கந்தைப் பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பொலொன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இச்சம்பவம் பற்றி வெலிக்கந்தைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.







SHARE

Author: verified_user

0 Comments: