3 Apr 2019

வீதி விபத்தில் மீன் வியாபாரி ஸ்தலத்திலேயே பலி

SHARE
புதன்கிழமை 03.04.2019 அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சிக்கி காத்தான்குடி – பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் பாலமுனையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான மீன்  வியாபாரி எம்.எஸ்.எம். லாபிர் (வயது 40) என்பவரே மரணித்துள்ளார்.

நீண்டகாலமாக மீன் வியபாரத்தில் ஈடுபடும் இவர் மட்டக்களப்புப்  பிரதேசத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கும் ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்புக்குமாக மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரென உறவினர்கள் தெரிவித்தனர்.

இதன்போதே புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி உயரிழந்துள்ளார்.

உடற்கூறாய்வுப் பரிசோதனைகள் இடம்பெற்ற பின்னர் சடலம் நல்லடக்கத்திற்காக காத்தான்குடிப் பிரதேசத்திற்கு எடுத்து வரும் நடவடிக்கையில் தாம் ஈடுபட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஹம்பாந்தோட்;டைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




SHARE

Author: verified_user

0 Comments: