26 Apr 2019

காத்தான்குடியில் வழமைக்குமாறாக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஜூம்மா தொழுகை இடம்பெற்றது.

SHARE
வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமிய மக்கள் ஜூம்மா தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள சியோன் வேலாயத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒருவித பீதி காணப்பட்டு வருகின்றது.
இதனிடையே தற்கொலைக் குண்டுத்தாக்கதல் இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற பின்னர் வெள்ளிக்கிழமை (26) ஜூம்மாத் தொழுகையின்போது கத்தான்குடியில் பள்ளிவாசல்களுக்கு பலத்த பாதுகாப்பு இடம்பட்டிருந்தது. இதன்போது ஜூம்மா பள்ளிவாலுக்கு ஜூம்மாத் தொழுகைக்கு வந்த அனைவரும் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனைக்குட்படுத்த பின்னரே தொழுகையில் ஈடுபட்டனர்.

இச்சந்தர்ப்பத்தில் காத்தான்குடியிலுள்ள மக்களும் பீதியில்தான் காணப்படுவதாக பள்ளிவாசல் நிருவத்தினர் தெரிவித்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: