7 Mar 2019

வாகரை பொலிஸாரின் மத நல்லிணக்க சேவையைப் பாராட்டி தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் விருது வழங்கி வைப்பு

SHARE
வாகரை பொலிஸாரின் மத நல்லிணக்க சேவையைப் பாராட்டி  தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் விருது வழங்கி வைப்பு.
வாகரை பொலிஸாரின் மத நல்லிணக்க சேவையைப் பாராட்டி  தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் விருது வழங்கி வைக்கப்பட்டதாக அதன் இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.
வாகரைப் பிரதேசத்தில் கத்தோலிக்கர் அல்லாத வேறு மதப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக மயானக் காணி பெற்றுக் கொடுப்பதில் முன்னின்றுழைத்த அலுவலர்கள் பட்டியலில் வாகரைப் பொலிஸாரின் சேவையும் பாராட்டப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே இவ்விருது வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
புதன்கிழமை 06.03.2019 வாகரைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள், தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன், உட்பட அதன் சர்வமத உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: