மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் மூன்று வாலிபர்கள் உடல் கருகிப்பலி
மட்டக்களப்பு- வந்தாறுமூலை பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு (29.03.2019) மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் மூன்று வாலிபர்கள் உடல் கருகிப்பலியானர்கள்.
மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நான்கு இளைஞர்கள் அதிகவேகத்துடன் ஒரேதிசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் மற்றையது மோதியதையடுத்து எரிபொருள் தாங்கி வெடித்து தீப்பற்றிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவ்வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அதில் சிக்கியுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து ஏற்பட்ட வாகன நெரிசலினால் மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதி போக்குவரத்து இரண்டு மணிநேரம் சீர்குலைந்தது.
இவ்விபத்தில் மட்டக்களப்பு- பலாச்சோலை 22 வயதுடைய மோகநாதன் மயுரன் 23 வயதுடைய முருகப்பிள்ளை பவித்திரன் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதான எம்.ஏ.எம். அத்தீப் ஆகிய வாலிபர்களே உயிரிழந்தவர்களென அடையாளம் காணப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சடலங்களும் அங்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
0 Comments:
Post a Comment