இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின், நேத்ரா தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த களுதாவளைப் பிரதேச விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று செவ்வாய்க்கிழமை (13) களுதாவளை கடற்கரை வீதியில் அமைந்துள்ள நாகதம்பிரான ஆலய முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது இதன்போது அப்பகுதி விவசாயிகள் தாம் எதிர்கொண்டு பிரச்சனைகள், மற்றும் சவால்கள், தொடர்பில் விவசாயிகள் எடுத்தியம்பினர்
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம், அப்பகுதி விவசாயப் போதனாசிரியர் க.லக்சுமணன், கிழக்குப் பல்கலைக் கழக பேராசிரியர் ஞா.தில்லைநாதன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், முன்னாள் விவசாயப் பணிப்பாளரும் முன்னாள மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.கனகசபை, ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்குரி விளக்கங்களை வழங்கிதோடு, கருத்துக்களையும் வழங்கினர்.
0 Comments:
Post a Comment