4 Feb 2019

மாடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் காட்டு யானை தாக்கியதில் பலி

SHARE
மாடு மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் காட்டு யானை தாக்கியதில் பலி
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை குளுவினமடு பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை 03.02.2019 குளுவினமடு கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரபிள்ளை சின்னத்தம்பி (வயது 78) என்பரே பலியாகியுள்ளார்.

அவர் வசிக்கும் வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள பகுதியில், தமது மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது காட்டுப்பகுதியிலிருந்து திடீரென பிரவேசித்த காட்டு யானை இந்த வயோதிபரைத் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையின்  பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


SHARE

Author: verified_user

0 Comments: