12 Feb 2019

உரிமைகளை கேட்டு நிற்கின்ற இனத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் அரசும் அதன் அடிவருடிகளும் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் கூட்டணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார்

SHARE
உரிமைகளை கேட்டு நிற்கி
ன்ற இனத்தை ஒடுக்குவதற்கான முயற்சிகளில் அரசும் அதன் அடிவருடிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் மக்கள் கூட்டணி திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார்தன்னுரிமைகளை கேட்டு நிற்கின்ற இனமொன்றின் உரிமைக்குரலை அடக்கி விடுவதற்கான முயற்சிகளில் அரசும் அதன் அடிவருடிகளும் ஈடுபட்டு வருகின்றனர் என தமிழ் மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும் திருகோணமலை நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினருமான சிவசுப்பிரமணியம்  நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை 12.02.2019 அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தன்னுரிமைகளை கேட்டு நிற்கின்ற இனமொன்றின் உரிமைக்குரலை அடைத்து விடுவதற்கான முயற்சிகளில் அரசும் அதன் அடிவருடிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிமைக்காகப் போராடும் இனத்திற்கு அரைக்குறைத் தீர்வொன்ற அரசியல் வரைபு என்ற அடிப்படையில் திணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
வடக்கு, கிழக்கு இணைப்பில்லாத, சமஷ்டிமுறையற்ற, பௌத்தத்திற்கு முன்னுரிமையளிக்கின்ற விடயங்களை உள்ளடக்கிய தீர்வினை அல்லது அவர்களது பரிபாஷையில் கூறுவதானால் அரசியல் வரைபை தர முயற்றிக்கின்றார்கள்.

இதனைத் தமிழ் மக்கள் ஒருபோதும்  ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.
விழித்திருக்கும்போது ஒரு கருத்துடனும், ஒரு கருத்தையும் கொண்டிருக்கும் இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த பேரினவாதக் கட்சிகள் இந்த நிலைப்பாட்டிலேயே இருந்து வருகின்றன.

இக்கட்சிகள் ஆட்சிக்கு வர முன்னர் தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக நாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்கள் உரிய கௌரவத்துடனும், மரியாதையுடனும் வாழும் தீர்வை இலங்கைத் தீவில் கொண்டு வருவோம் என்கின்றனர்.

பின்னர் ஆட்சிக்கு வந்தவுடன் இலகுவாக அதனை மறந்துவிட்டு இனவாதம் பேசுவதும் வரலாற்று வழி வந்த நடைமுறையாகி விட்டது.
இனியும் தமிழ் மக்கள் இவர்களை நம்பி  எதிர்காலத்தில் ஏமாறத் நம்பத்தயாரில்லை.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையில், காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் இருந்த போதும் அதனை கூட நடைமுறைப்படுத்தாத இந்த பேரினவாத அரசுகள் தமிழ் மக்களின் நியாய பூர்வமான உரிமைகளை வழங்கும் என எதிர்பார்ப்பதற்கு இடமில்லை.

SHARE

Author: verified_user

0 Comments: