11 Jan 2019

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி பிரதேசத்தில் வர்த்க நிலையங்கள் எதுவும் இயங்கவில்லை கர்த்தால் அனுஸ்ட்டிப்பு

SHARE
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி பிரதேசத்தில் வர்த்க நிலையங்கள் எதுவும் இயங்கவில்லை கர்த்தால் அனுஸ்ட்டிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை (11) கர்த்தார் அனுஸ்ட்டிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஆரையதம்பதி, தாளங்குடா, கிராங்குளம், மற்று செட்டிபாளையம், களுதாவளை, களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, உள்ளிட்ட பல பிரதேவசங்களிலுமுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பொதுச் சந்தைகளும் இயங்கவில்லை.

இந்நிலையில் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ளபோதிலும், மாவர்கள்கள் செல்லவில்லை. இதேவேளை இலங்கை போக்குவரத்திற்குச் சொந்தமான பேரூந்துகள் சேவையிலீடுபடுவதோடு, தனியார் பேரூந்துகள் மிகக் குறைந்தளவானவை சேவையிலீடுவதையும் அவதானிக்க முடிகின்றது.பயணிகளின் நடமாட்டமும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன 

கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுனர் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் அமைப்பு வெள்ளிக்கிழமை (11) கர்த்தால் அனுஸ்ட்டிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.














SHARE

Author: verified_user

0 Comments: