7 Jan 2019

மாவட்ட செயலகத்தை அண்மித்த வாவியருகே கரையொதுங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு

SHARE
கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த நிலையில் தேடப்பட்டு வந்த 16 வயதான யுவதியின் சடலம் திங்கட்கிழமை 07.01.2019 மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தை அண்மித்த வாவியருகே  கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலடங்கும் பூநொச்சிமுனை 2ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கிருஷாந்தினி (வயது 16) என்பரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இந்த யுவதி சனிக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்துள்ளார்.

இதனையடுத்து யுவதியை தேடும் பணியில் மீனவர்கள், உறவினர்கள், கடற்படையினர், பொலிஸார் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.

இவர் காதல் விவகாரம் தொடர்பில் மன விரக்திக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பொலிஸார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.‪

SHARE

Author: verified_user

0 Comments: