10 Jan 2019

வகுப்புச்குச் செல்லும் மாணவிகள் மீது சேட்டை விட்டவர்கள் வசமாக மாட்டினர்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பகுதிநேர வகுப்புக்குச் செல்லும் மாணவிகள் மீது அனாகரிகமான முறையில் ஒரு கும்பல் மிக நிண்ட காலமாக நடந்துகொண்டு வந்துள்ளது. 
இவ்வாறு மாணவிகள் மீது அவதூறாக நடக்க முற்படுகையில் வியாழக்கிழமை (10) மாலை அக்கும்பலை அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.

மாணவிகள் மீது அவதூறாக செயற்பட்ட 4 பேர் கொண்ட அக்கும்பலை அப்பகுதி பொதுமக்கள் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொலிசார்  4 பேருக்கும் எச்சரிக்கை வழங்கிவிட்டு அப்பகுதியைச் சேர்ந்த கிராம சேவகரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இளைஞர்களின் பெற்றோர்களை அழைத்து ஆலோசனை வழங்கி, இளைஞர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கி விட்டு கிராம சேவை உத்தியோகஸ்த்தர் அவர்களை பெற்றோரிடம் அனுப்பி வைத்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: