2019 ஆம் ஆண்டின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை (01) காலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் உத்தியோகத்தர்கள் தமது அரச கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது காலை 9.00 மணிக்கு தவிசாளர் ஞா.யோகநாதன் தலமையில் இடம்பெற்றது.
தேசியகொடி ஏற்றப்பட்டு உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு செயலாளர் க. லட்சுமிகாந்தன் அவர்களின் முன்பாக அனைத்து உத்தியோகத்தர்களும் சேவை உறுதிப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்று தொடர்ந்து கடமைகளை ஆரம்பித்தனர்.
0 Comments:
Post a Comment