20 Dec 2018

போலியான கடிதத் தலைப்புக்களுடன் உதவி கோரி நிதி வசூலிப்போர் தொடர்பில் எச்சரிக்கையாய் இருக்குமாறு வேண்டுகோள்

SHARE
போலியான கடிதத் தலைப்புக்களுடன் உதவி கோரி நிதி வசூலிப்போர் தொடர்பில் எச்சரிக்கையாய் இருக்குமாறு வேண்டுகோள்
போலியான கடிதத் தலைப்புக்களுடன் உதவி கோரி நிதி வசூலிப்போர் தொடர்பில் எச்சரிக்கையாய் இருக்குமாறு ஏறாவூரின் பொது அமைப்புக்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

நோய்க்கான சிகிச்சைக்கு நிதியுதவி, பிள்ளைகளின் கல்விக்கான செலவுகளுக்கு உதவி கோரல், பொதுக்  கட்டிடங்கள் நிருமாணத்திற்கு நிதியுதவி, வாழ்வாதாரத் தொழிலைத் தொடங்க நிதியுதவி, அநாதைகளைப் பராமரிக்க, வழிபாட்டுத் தலங்களை அமைக்க நிதி உதவி, சமயச் சடங்குகளை மேற்கொள்ள நிதி உதவி இவ்வாறு பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்து நிதி வசூலிப்பதற்காக வெளியிடங்களிலிருந்து பலர் போலியான கடிதத் தலைப்புக்களுடன் நடமாடுவதால் இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

நிதி வசூலிப்போர் வரும்போது அவர்கள் கூறும் விடயங்கள் உண்மையானவையா என உறுதிப்படுத்திக் கொண்டு உதவிகளை வழங்குமாறும் அந்த  வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று வெளியூர்களில் திருமணம் முடிக்க பள்ளிவாசல்களின் கடிதத் தலைப்புக்களுடன் வருவோர் தொடர்பிலும் கவனத்தைச் செலுத்தி சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிருவாகத்துடன் அல்லது ஊரின் பொது அமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டு திருமணம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர் கூறும் விடயங்கள் உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு திருமண ஏற்பாடுகளைச் செய்வது ஏமாற்றங்களையும் மோசடிகளையும் தவிர்க்க சிறந்த வழி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: