10 Dec 2018

மட்டக்களப்பில் 42 அடி உயரமான நத்தார் மரம்

SHARE
மட்டக்களப்பு, பார்வீதி புனித லூர்து அன்னை ஆலயத்தில் அமைக்கப்பட்ட 42 அடி உயரமான நத்தார் மரம் சனிக்கிழமை 8 ஆம் திகதி மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புனித லூர்து அன்னை ஆலயத்தின் பங்குமக்கள் மற்றும் இளைஞர்களின் முயற்சியினால் மின்குமிழ்களின் மூலம் குறித்த நத்தார் மரம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தின் பங்குத்தந்தை  லோரன்ஸ் அடிகளாரால் விசேட பிரார்த்தனை நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து மரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இயேசுக் கிறிஸ்த்துவின் பிறப்பினை சிறப்பிக்கும் வகையில் பல்வேறு பகுதிகளிலும் விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முழுதும் மின்குழிழ்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த நத்தார் மரத்தினை பார்வையிட பெருமளவிலானோர் வருகைத் தருகின்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: